நாகதாளி பழத்தில் இருக்கும் மருத்துவப் பயன்கள்: இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இதயத் துடிப்பை சீரடையச் செய்யும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரி செய்துவிடும். உயர் இரத்த அழுத்தத்தால் வரும் மாரடைப்பைத் தவிர்க்க முடியும். மேலும், கருமுட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்தப் பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
குங்குமப்பூவை விட இந்த நாகதாளிப் பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பையில் இருக்கும் நீர் கட்டிகள் தானாக அழிந்து விடுமாம். இதை சாப்பிடும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிவப்பாக இருக்குமாம். இந்தப் பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களும் விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிட்டு வரும்போது மற்ற எந்தவித இனிப்பான பொருட்களும் சாப்பிடக் கூடாது. டீ, காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பழம் கக்குவான் நோய், புற்றுநோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்தது.